திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "

பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"

செவ்வாய், 17 நவம்பர், 2015

ஆதிரை அறக்கட்டளையின் நோக்கம்

  • எங்கள் அன்பு மகள் ஆதிரை நினைவாக ஏழை குழந்தைகளின் உயிர்காக்கும் மருத்துவத்திற்கு உதவிட ஆதிரை அறக்கட்டளை  என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம் .
  • இந்த அமைப்பின் மூலம் எங்களாலும் ,எங்கள் நண்பர்களாலும் இயன்ற உதவியை செய்வதே எங்களின் தலையாய நோக்கம் .
  • இந்த அறிவியல் உலகில் பல பல நோய்கள் காரணம் தெரியாமலே உருவாகி பிஞ்சு குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கி கொண்டிருகின்றன. 
  • இப்புவியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நலமுடனும்,வளமுடனும் வாழவேண்டும் என்பதே எங்களின் நோக்கம் .